சீமாந்தரா மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! இருளில் இருந்து மீளும் ஆந்திரா
ஹைதராபாத்: முதல்வர் கிரண்குமார்ரெட்டியின் வேண்டுகோளை ஏற்று சீமந்தரா மின் ஊழியர்கள், இன்று தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆந்திராவில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக சீமந்திராவின் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதால் சீமந்திராவின் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் மருத்துவமனைகள் மற்றும் ரயில் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் கூட பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது வீடுகளிலும் பொதுமக்கள் கடந்த 5 தினங்களாக மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் பாய்லின் புயலும் ஆந்திரா நோக்கி வருவதால், மக்களுக்கு மேலும் கூடுதல் சிரமங்கள் ஏற்படும் என்றும், இதனால் மனிதாபிமானத்துடன் போராட்டத்தை விடுமாறும் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மின் ஊழியர்களை கேட்டுக்கொண்டார். மேலும் போராட்டத்தை கைவிடாவிட்டால் 'எஸ்மா' சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்து, போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பினார் ஆந்திர மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications