சசிகலாவை காப்பாற்ற சிறையிலுள்ள சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. டிஜிபி ரூபா வெளியிட்ட திடுக் தகவல்
பார்வையாளரை சந்திப்பதற்காகவே சசிகலாவுக்கு தனி அறை உள்ளதாகவும், அவர் மீது புகார் கூற ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் ரூபா 2-ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதற்காகவே தனி அறை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிறை துறை டிஐஜி இரண்டாவது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா, கடந்த சில நாள்களுக்கு முன் அச்சிறையை ஆய்வு செய்ய சென்றார். அதில் தாம் கண்ட முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தார்.

அதில் சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்க அவரிடம் இருந்து சிறை துறை அதிகாரிகளும், சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவும் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது தமிழக மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
ரூபாவின் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று சிறை துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம் சிறையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ரூபா தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி, சிறை துறை டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கென்று தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறையில் 5 நாற்காலிகள் போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது அறையில் இருந்த 7,8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும். அதை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications