சசிகலாவை காப்பாற்ற சிறையிலுள்ள சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. டிஜிபி ரூபா வெளியிட்ட திடுக் தகவல்
பார்வையாளரை சந்திப்பதற்காகவே சசிகலாவுக்கு தனி அறை உள்ளதாகவும், அவர் மீது புகார் கூற ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் ரூபா 2-ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதற்காகவே தனி அறை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிறை துறை டிஐஜி இரண்டாவது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா, கடந்த சில நாள்களுக்கு முன் அச்சிறையை ஆய்வு செய்ய சென்றார். அதில் தாம் கண்ட முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தார்.

அதில் சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்க அவரிடம் இருந்து சிறை துறை அதிகாரிகளும், சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவும் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது தமிழக மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
ரூபாவின் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று சிறை துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம் சிறையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ரூபா தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி, சிறை துறை டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கென்று தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறையில் 5 நாற்காலிகள் போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது அறையில் இருந்த 7,8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும். அதை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications