சசிகலாவை காப்பாற்ற சிறையிலுள்ள சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. டிஜிபி ரூபா வெளியிட்ட திடுக் தகவல்
பார்வையாளரை சந்திப்பதற்காகவே சசிகலாவுக்கு தனி அறை உள்ளதாகவும், அவர் மீது புகார் கூற ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் ரூபா 2-ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதற்காகவே தனி அறை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிறை துறை டிஐஜி இரண்டாவது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா, கடந்த சில நாள்களுக்கு முன் அச்சிறையை ஆய்வு செய்ய சென்றார். அதில் தாம் கண்ட முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக சமர்ப்பித்தார்.

அதில் சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்க அவரிடம் இருந்து சிறை துறை அதிகாரிகளும், சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவும் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இது தமிழக மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
ரூபாவின் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று சிறை துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம் சிறையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ரூபா தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி, சிறை துறை டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கென்று தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறையில் 5 நாற்காலிகள் போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக புகார் எழுந்ததை தொடர்ந்து அவரது அறையில் இருந்த 7,8-ஆம் எண் கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும். அதை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications