31 வங்கிகளுக்கு தொடர்பு.. ஆக்சிஸ், ஐசிஐசிஐக்கு சம்மன்.. பூதாகரமாகும் நீரவ் மோடி விவகாரம்
நீரவ் மோடி வாங்கிய லோன் முறைகேட்டில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கி நிர்வாகிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.
டெல்லி: நீரவ் மோடி வாங்கிய லோன் முறைகேட்டில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கி நிர்வாகிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

எத்தனை
இதில் பஞ்சாப் நேஷனல் வங்கிதான் முக்கியமான பின்புலம் என்றாலும் இன்னும் 31 வங்கிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்த வங்கிகள் கிளை மூலமாக லோன் கொடுப்பதற்காக மெயில்கள் சென்று இருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் எல்லாம் இந்த 31க்குள் அடக்கம்.

எவ்வளவு பணம்
இதில் தற்போது ஐசிஐசி வங்கி, ஆக்சிஸ் வங்கி இரண்டு வங்கிகளும் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் மொத்தமாக 3000 கோடி வரை மோசடிக்கு உதவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐசிஐசி வங்கி 405 கோடி லோன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சம்மன் அளிக்கப்பட்டது
இந்த விவகாரத்தில் தற்போது ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குனரான சந்தா கோச்சாருக்கும் , ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோருக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கும் இந்த முறைகேட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும்
இவர்கள் இருவரும் 'தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்' முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மோசடியில் இன்னும் 29 பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட இருக்கிறது. முக்கியமான வங்கிகள் இந்த பட்டியலில் கீழ் வர இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications