பீகாரில் ஆம்புலன்ஸ் - லாரி மோதல்: தாய், பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பூர்னியா: பீகாரில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள், குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் இருந்து அராரியா மாவட்டத்துக்கு கர்ப்பிணி பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போதே அதில் இருந்த கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

Seven killed in truck-ambulance collision in Bihar

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பூர்னியா மாவட்டத்துக்கு உட்பட்ட மவுலால் சவுக் தேசிய நெடுஞ்சாலை எண் 31 ல் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சும், எதிரே வந்த லாரி ஒன்றும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில், பிறந்த குழந்தை, அதன் தாய் மற்றும் உடன் இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்சு உரிமையாளரும், அதன் டிரைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+