பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 7 தேசிய ஹீரோக்கள்
டெல்லி: பதன்கோட் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகளுடனா மோதலில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தேசிய ஹீரோக்களாக மாறியுள்ள அந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகின்றன.
ஹீரோக்கள் வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை: கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார். வெடிகுண்டு அகற்றும் பிரிவில் பணியாற்றி வந்தார். கிரானைட் குண்டு ஒன்றை செயலிழக்க செய்ய முயன்றபோது அது வெடித்ததில் நிரஞ்சன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூரிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு கமாண்டோ, குருசேவக் சிங், முதல்கட்ட துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்தார். குண்டடி பட்ட நிலையிலும், மீண்டும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டபடி தீரத்தோடு முன்னேறியுள்ளார் குருசேவக்சிங். மருத்துவர்கள் அவரை நெருங்குவதற்குள்ளாக வீர மரணம் அடைந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலா நகரை சேர்ந்தவர். ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.
வீரமரணம் அடைந்த, 51 வயதான பாதுகாப்பு படை சுபேதாரான, பட்டே சிங் சூட்டிங்கில் சாம்பியன். 2 வருடங்கள் முன்புதான் பதன்கோட்டில் அவருக்கு பணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு, டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில், துப்பாக்கி சுடுதலில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர், பட்டேசிங். பஞ்சாப்பின், குருதாஸ்பூரை சேர்ந்தவர்.
வீரமரணம் அடைந்த, ஹவில்தார் வீரரான குல்வந்த் சிங், குருதாஸ்பூரை சேர்ந்தவராகும். மற்றொரு ராணுவ வீரரான ஜெகதீஷ், தீவிரவாதிகளில் ஒருவனை பின்தொடர்ந்து சென்று, அவனது துப்பாக்கியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், துப்பாக்கி வெடித்ததில், ஜெகதீஷ் வீரமரணம் அடைந்தார். வீரமரணம் அடைந்த மற்றொருவர் சஞ்சிவ் குமார்.












Click it and Unblock the Notifications