மத்திய பட்ஜெட்: கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை, 300% அபராதம்
டெல்லி: கருப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கருப்பு பணம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி கூறுகையில்,

கருப்பு பணம்
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கிய நிதியைப் போன்று 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கருப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க வரிவிதிப்பில் திருத்தம் செய்யப்படும்.

புதிய சட்டம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வர புதிய சட்டம் அதுவும் இந்த கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.

வெளிநாட்டு முதலீடு
வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கல் செய்கையில் தெரிவிக்க வேண்டும்.

சொத்து
வருமானம் அல்லது சொத்து விவரங்களை மறைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications