அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம்... 2 பெண்கள், ஒரு ஆண் சிக்கினர்.. மற்றவர்கள் ஓட்டம்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள பிரபலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் ஒரு ஆணையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
ரெய்டின்போது 2 பெண்களையும், ஒரு ஆணையும் மட்டுமே போலீஸாரால் பிடிக்க முடிந்தது.
அசோக் கார்டன்
போபால் நகரின் அசோக் கார்டன் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன.
வர்த்தமான் கிரீன் பார்க்
இப்பகுதியில் உள்ளது வர்த்தமான் கிரீன் பார்க் புகழ் பெற்றது. இங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து போயுள்ளனர்.
போலீஸுக்குத் தகவல் கொடுத்த மக்கள்
இதுகுறித்து சந்தேகமடைந்த அங்கு வசிக்கும் மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
தெறித்து ஓடிய ஆண்களும், பெண்களும்
போலீஸார் குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்தபோது அங்கு நிறைய இளம் ஜோடிகள் இருப்பதைப் பார்த்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி வெளியே ஓடினர்.
சிக்கிய 2 பெண்கள், ஒரு ஆண்
அதில் 2 பெண்களையும், ஒரு ஆணையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். வீட்டில் ஏராளமான மது பாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது. குடித்து விட்டு கும்மாளம் போட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சிக்கியவர்களும், அந்த வீட்டில் கும்மாளம் போட்டவர்களும் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.