For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமாஜ்வாடி பிரமுகர் வீட்டில் விபச்சாரம் - 9 பெண்கள் மீட்பு, 5 ஆண்கள் கைது

By Siva
Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தர பிரசேத்தில் வாடகை வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களை போலீஸார் மீட்டனர். அவர்களை அந்த தொழில் செய்ய வைத்த 5 ஆண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதி ஈக்கோ பார்க் அருகே சைலேந்திர குப்தா என்கிற தீபக் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் இன்று காலை அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்கள் மற்றும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தீபக், சாஹில், சித்தார்த் சர்மா, முனி ஸ்ரீவஸ்தவா, ராஜு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தீபக்கின் வீட்டு வாசலில் உள்ள பெயர் பலகை ஆளும் சமாஜ்வாடி கட்சி கொடியின் நிறமான சிவப்பு, பச்சை நிறத்தில் இருந்தது. மேலும் பெயர் பலகையில் சைலேந்திரா, பொதுச் செயலாளர், உத்தர பிரதேச உத்யோக் வியாபார் சங்கதன் என்று எழுதியிருந்தது.

இது குறித்து எஸ்.பி. சுரேந்திர திவாரி கூறுகையில்,

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

English summary
Police on Monday claimed to have busted a sex racket with the arrest of nine girls and five men from a rented house at Kalyanpur area in Kanpur this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X