பாலியல் தொல்லை வழக்கு- நீதிபதி ஏ.கே. கங்குலி திடீர் விடுப்பில் சென்றார்
Subscribe to Oneindia Tamil

சட்ட பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி என்பது குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து அவர் வகித்து வரும் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நீதிபதி கங்குலி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கங்குலி திடீரென விடுப்பில் செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். சொந்த காரணங்களுக்காக 2 நாட்கள் விடுப்பில்செல்வதாக கங்குலி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதால் கங்குலி விவகாரமும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications