பாலியல் புகார்: முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமாருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த சட்ட பயிற்சி மாணவி நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அவர் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். அப்போது நீதிபதி ஸ்வதந்தர் குமார், அட்டர்னி ஜெனரல் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்தது. பிப்ரவரி 14-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications