லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், மம்தாவுக்கு ஆதரவு.. இமாம் புகாரி அறிவி்ப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதித்தோம். 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு நான ஆதரவு தெரிவிக்கிரேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சி தான் அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற வே்ண்டும். மதவாத சக்திகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்றார்.
இதற்கு முன்பு 2004 தேர்தலின்போது வாஜ்பாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார் புஹாரி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமிய வாக்குகளில் 36 சதவீதம் கிடைத்தது. பாஜகவுக்கோ வெறும் 7 சதவீத வாக்குகளே கிடைத்தன.
இதனால் புஹாரியின் ஆதரவு முஸ்லீம்களிடையே செல்வாக்கு இழந்து போனதை அந்தத் தேர்தல் நிரூபித்தது.
அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2009 தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார் புஹாரி. அப்போதும் 2004 தேர்தலைப் போலவே முஸ்லீம் வாக்குகள் காங்கிரஸுக்கே கிடைத்தன.
இப்போது காங்கிரஸுக்கும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசுக்கும் ஆதரவு அளித்துள்ள அதே நேரத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் சந்தர்ப்பவாத கட்சிகளாக உள்ளதால் அவர்களுககு ஆதரவு தர முடியாது என்றும் புஹாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து புஹாரி கூறுகையில், முசாபர் நகரில் முஸ்லீம்களைக் காக்க சமாஜ்வாடி கட்சி தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.
இந்த வார தொடக்கத்தில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார் புஹாரி. இதை பாஜக விமர்சித்திருந்தது. மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தது.












Click it and Unblock the Notifications