பாஜக எம்.பி தாக்கி இறந்த சக்திமான் குதிரை நினைவாக பூங்கா.. உத்தராகண்ட் அரசு அமைத்தது
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: பாஜக எம்.பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 'சக்திமான்' என்ற காவல்துறை குதிரை நினைவாக உத்தராகண்ட் மாநிலத்தில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் கடந்த மார்ச்சில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடந்த பேரணியின்போது போலீஸ் குதிரை சக்திமான் பாஜக எம்.பி, கணேஷால் தாக்கப்பட்டு ஏப்ரல் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Uttarakhand: 'Shaktimaan park' constructed in Dehradun Police line. CM Harish Rawat will inaugurate it today. pic.twitter.com/D4rEN762kU
— ANI (@ANI_news) July 11, 2016
நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அந்த குதிரையின் பேரில் டேராடூனில் அமைக்கப்பட்ட சக்திமான் பூங்காவை உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications