மேகாலய ஆளுநராக தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் இன்று பதவியேற்பு!!
ஷில்லாங்க: மேகாலய மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரமுகர் சண்முகநாதன் இன்று பதவியேற்க உள்ளார்.
மேகலாய ஆளுநராக இருந்த கிருஷண்காந்த் பால் கடந்த ஜனவரி மாதம் உத்தரகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக மேகாலய மாநிலத்தையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மூத்த பிரமுகரான சண்முகநாதன் மேகாலயாவின் புதிய ஆளுநராக கடந்த 12-ந் தேதி நியமிக்கப்பட்டார். முதுகலைப் பட்டதாரியும், அரசியல் அறிவியலில் எம்.பில். பயின்றவருமான சண்முகநாதன், 1962-ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியிலும் அவர் பல பொறுப்புகளை வகித்துள்ளார். இன்று மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் அவர் ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அம்மாநில தலைமை நீதிபதி உமாநாத்சிங் பதவியேற்பு செய்து வைக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications