52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ....சென்செக்ஸ் விர்ர்!
இந்திய பங்குச் சந்தையில் கடந்த வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.
மும்பை: இந்திய பங்கு சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் 400 ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இன்று காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகலில் 400 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் ரூ.6 லட்சம் கோடி வரை வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ், எச்டிஎப்சி மற்றும் அதன் வங்கி நிறுவன பங்குகள் உயர்ந்துவிட்டதன் காரணமாக இந்திய பங்குசந்தையில் 300 புள்ளிகள் உயர்ந்துவிட்டது.
இன்று பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.88 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக இதுவரை இருந்தது. இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு 36,679 புள்ளிகளாக உயர்ந்தது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications