சுனந்தா மரணம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: சசிதரூர் உறுதி!
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மர்மமான மரணம் அடைந்தார். அதிக அளவு மருந்து உட்கொண்டதே அவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் சசிதரூரிடம், அவரது மனைவி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்ஙகுமார் ஷிண்டேவுக்கு சசிதரூர் எழுதிய கடிதத்தில், ''எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்'' என உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications