அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ
அர்ஜுனா விருக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
கிரிக்கெட் வீரரான தவான் ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அதேபோல் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தான கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.