ஷிண்டேவின் முஸ்லீம்கள் குறித்த கடிதம் சிறுபான்மையினரை திருப்திபடுத்தத் தான்: ஆர்.எஸ்.எஸ். தாக்கு
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா: அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே முதல்வர்களுக்கு கடிதம் எழுதியது சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்தத் தான் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக் கூடாது என்றும், அவ்வாறு அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் கூறுகையில்,
ஷிண்டேவின் கடிதம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இது சிறுபான்மையினரை திருப்திபடுத்த எழுதப்பட்டது. ஒரு குற்ற விசாரணை மதத்தின் அடிப்படையில் நடத்தப்படக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications