விபச்சாரிகளை போல வந்து பணம் சம்பாதிக்கும் குஜராத்திகள்: சிவசேனா கடும் பாய்ச்சல்!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்து விபச்சாரிகளைப் போல பணம் சம்பாதிக்கும் குஜராத்திகள் இந்த மாநிலம் உதயமான தினத்தை கொண்டாடுவதில்லையே.. என்று சிவசேனா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் மே 1ம் தேதி மாநிலம் உருவான நாளை "மகாராஷ்டிரா" நாளாக கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இதுபற்றி எழுதப்பட்டு இருப்பதாவது:
குஜராத்தில் இருந்து வரும் தொழிலதிபர்கள் தங்களது தொழிலில் மட்டும் திருப்தி காணுகின்றனர். இவர்கள் மாநில அரசியலில் அக்கறை செலுத்துவதில்லை.
இந்த மாநிலத்தில் வாழும் எத்தனை குஜராத்திகள் மகாராஷ்டிரா மாநில நாளை கொண்டாட முன்வருகின்றனர்? அவர்கள் விபச்சாரிகளைப் போலத்தான் மும்பையை சுரண்டுகின்றனர். வரும்போது பிச்சைப் பாத்திரம் ஏந்தியபடி வந்தவர்கள் இப்போது தங்கத்தில் மிதக்கிறார்கள்.
இந்த குஜராத் தொழிலதிபர்கள் பணம் சம்பாதித்த பின்னர் நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். தங்களது சாதியின் பெயரில், மதத்தின் பெயரில் பிரதமர் ஒருவரை உருவாக்குவதற்காக குஜராத்திகள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications