For Daily Alerts
Just In
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும் சிவசேனா போட்டி
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் சிவசேனா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 15-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டன. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் 25 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டன.
இந்த நிலையில், மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட சிவசேனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
English summary
The Shiv Sena will contest all 288 seats in the Maharashtra Assembly elections.
Story first published: Saturday, September 27, 2014, 12:28 [IST]