கோபிநாத் முண்டே கார் விபத்து- சிபிஐ விசாரணைக்கு சிவசேனா கோரிக்கை
மும்பை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபிநாத் முண்டே கார் விபத்தில் சிக்கியது குறித்து ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முண்டே குடும்பத்தைச் சேர்ந்த பிரமோத் மகாஜன் முன்னர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

தற்போது முண்டே கார் விபத்தில் பலியாகி உள்ளார். மகாஜன் - முண்டே குடும்பத்தை அரசியல் இருந்து ஒழிக்க நடந்த சதியா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் கோபிநாத் முண்டே உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முண்டே மரணம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது தமது கருத்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்து; அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications