சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சிவசேனா எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட ஆயுட்காலத் தடை!

மகாராஷ்டிராவில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, தேர்தல்களில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி கோலப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் கோலப். மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கோலப் மீதான தடையும், தீர்ப்பும், சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோலப் குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்ததைத் தொடர்ந்து தற்போது கோலப்புக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஆனால் தன் மீதான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கோலப் கூறியுள்ளார். மேலும் தன்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட தேசியவாத காங்கிரஸ் செய்த சதியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டதே கோலப்புக்கு இந்தப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கிரிமினல் அல்லது ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடவோ அரசுப் பதவிகளை வகிக்கோ தகுதி இழப்பார்கள். இதன்படியே தற்போது கோலப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் இப்படி ஒரு சிக்கல் உள்ளது.












Click it and Unblock the Notifications