சந்தேகங்களுக்கு பதில் தந்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே
மும்பை: சிவசேனா எழுப்பியிருக்கும் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தருவோம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்தது. தேசத்தின் நலன் கருதி இம்மசோதாவை ஆதரிப்பதாக சிவசேனா அறிவித்திருந்தது.

தற்போது சிவசேனாவின் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாவது:
ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் இம்மசோதா மீதான அச்சங்கள், சந்தேகங்கள் இருந்தால் அவற்றுக்கு பதில் தர வேண்டும்.
இம்மசோதான மீதான அனைத்து சந்தேகங்களுக்கும் மத்திய அரசு பதில் தர வேண்டும். இந்திய குடியுரிமை பெறும் அகதிகள் எங்கே தங்கி இருப்பார்கள்? எந்த மாநிலத்தில் தங்குவார்கள் என்பதை எல்லாம் விளக்க வேண்டும். இதற்கு பதில் கிடைக்காத வரை மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரிக்கமாட்டோம்.
அரசை ஆதரிக்காவிட்டால் தேசதுரோகி என பிம்பத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டது பாஜக. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
முன்னதாக லோக்சபாவில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா, ராஜ்யசபாவில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications