மோடியின் கனவுக்காகவெல்லாம் நாங்கள் பாடுபட முடியாது.. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே காட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோடிக்காக நாங்கள் பாடுபட முடியாது - சிவசேனா தாக்கு- வீடியோ
மும்பை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகும்படி மகாராஷ்டிரா மாநில பாஜக தொண்டர்களை அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்திருந்த நிலையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.

சாம்னாவில் சிவசேனா தலைவர், உத்தவ் தாக்ரே கூறியுள்ளதாவது: நாங்கள் சாமானிய மனிதனின் கனவுக்காக தான் பாடுபடுகிறோமே தவிர, மோடியின் கனவுக்காக இல்லை.
மக்கள் தான் எங்களின் நண்பர்கள். அவர்களுடன் தான் கூட்டணி. யார் தோள் மீதும் ஏறிக் கொண்டு நாங்கள் தாக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், சிவசேனா வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications