ம.பியில் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவித்த பாஜக தலைமை.. சிவராஜ் சிங் சொன்னது இதுதான்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனக்கு மீண்டும் முதல்வர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோகன் யாதவ் என்பவரை முதல்வராக தேர்வு செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்து வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக கடந்த வம்பர் 17-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக 163 இடங்களில் அபார வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது.

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானா மீண்டும் முதல்வராக அறிவிக்கப்படுவாரா அல்லது கட்சி தலைமை வேறு யாரையாவது அறிவிக்குமா? என மிகுந்த பரபரப்புடன் தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். தேர்தல் முடிந்து ஒருவாரம் ஆகியும் பாஜக முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறி வந்தது.
மோகன் யாதவிற்கு பதவி: இதற்கு காரணம் சிவராஜ் சிங் சவுகானும் முதல்வர் பதவியை பெற கடுமையான முயற்சிகளை கொண்டார். ஆனால், பாஜக தலைமையோ சிவராஜ் சிங் சவுகானை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவ் என்பவரை முதல்வராக அறிவித்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வராக விரைவில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். மத்திய பிர்தேசத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கே மீண்டும் முதல்வர பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு பாஜகவின் டெல்லி தலைமை எடுத்த முடிவு பெரும் ஷாக்கை கொடுத்தது.
கடினமாக உழைக்கும் நண்பர்: இந்த நிலையில், மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்படது குறித்து முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பிரதேச முதல்வராக பாஜக சட்டமன்றக் குழு கூட்டத்தால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் மோகன் யாதவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பிரதேசத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு மோகன் யாதவ் எடுத்து செல்வார் என்று நான் நம்புகிறேன். புதிய பொறுப்பு கிடைத்துள்ள மோகன் யாதவிற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மோகன் யாதவ் கடினமாக உழைக்கும் நண்பர் எனவும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications