பள்ளி செல்ல மறுத்த 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
தானே: அம்பர்நாத்தில் பள்ளி செல்ல மறுத்ததற்காக தண்டித்தபோது மகன் பரிதாபமாக பலியான சம்பவத்தில் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.
தானே, அம்பர்நாத் பகுதி பீம் நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மஜித்கான்(வயது36) என்பவரது மகனான சஜித் அலி(10) அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான். படிப்பில் கவனம் இன்றி சஜித் பள்ளி செல்ல அடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சஜீத்தைக் கண்டித்து வந்துள்ளார் மஜித். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்வில் சஜித் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஜித் சம்பவத்தன்று இரவு சிறுவன் சஜித் அலியை வீட்டில் இருந்த கம்பை எடுத்து சரமாரியாக அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சஜீத் மயக்கமடைந்துள்ளான்.
உடனடியாக சஜீத்தை அவனது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சஜித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவாஜி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஜித் கானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications