Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்பயா பலாத்கார வழக்கு- சிறுவனை நிபந்தனைகளுடன் விடுவிக்க அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை நிபந்தனைகளுடன் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுதலை செய்வதற்கு பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Show juvenile's face to public after he is released: Nirbhaya's parents

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சிறுவனை விடுவிக்க அரசு முன்வந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 107வது பிரிவின் கீழ் அந்த சிறுவனிடம் ஒப்பந்தம் ஒன்று செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அந்த சிறுவனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் குற்றம் செய்தவனை சுதந்திரமாக உலாவ விடுவதா, விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று பாதிக்கப்பட்ட பெண் நிர்பயாவின் பெற்றோர் வேதனையுடன் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+