மே.வங்க அரசின் தலையீடு... மீண்டும் பள்ளிக்கு செல்கிறான் எச்ஐவி பாதித்த 7 வயது சிறுவன்!
கொல்கத்தா: எச்ஐவி பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை பள்ளிக்கு வரக் கூடாது என்று தடுத்து நிறுத்திய தனியார் பள்ளிக்கூட விவகாரத்தில் மேற்கு வங்க அரசு தலையிட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த சிறுவன் மீண்டும் பள்ளிக்கு வரவுள்ளான்.
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மவட்டத்தில் உள்ள பிஷ்னுப்பூரைச் சேர்ந்தவன் அந்த சிறுவன். அவனுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது. இதையடுத்து ஐந்து மாதங்களுக்கு முன்பு அவனை பள்ளியிலிருந்து நீக்கியது பள்ளி நிர்வாகம்.
மேலும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அந்த சிறுவனின் தாய் வழி பாட்டியையும், எச்ஐவி பாதித்துள்ளதா என்று சோதனை நடத்தி சான்றிதழை சமர்ப்பிக்குமாறும் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
தனியார் பள்ளியின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தங்களது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்களின் பெற்றோர்கள் இந்த சிறுவனை நீக்காவிட்டால், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று கூறியதால்தான் எச்ஐவி பாதித்த சிறவனை நீக்க வேண்டியதாயிற்று என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதையடுத்து அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது. அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கூட்டம் போட்ட மாவட்ட நிர்வாகம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாநில மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் சசி பாஞ்சா உத்தரவின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் அதே பள்ளியில் படிக்க தாங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மற்ற பெற்றோர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து திங்கள்கிழமை முதல் இந்த சிறுவன் மீண்டும் தனது படிப்பைத் தொடரவுள்ளான்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்சிப் நஸ்கர் கூறுகையில், ‘மீண்டும் சிறுவனை வரவேற்க மகிழ்ச்சி அடைகிறோம். மற்ற பெற்றோர்கள் ஆட்சேபித்ததால் தான் நாங்கள் நிறுத்த நேரிட்டது. தற்போது அனைவருக்கும் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்டும் அந்த சிறுவன் தனது படிப்பை தொடர்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே' என்றார்.
அந்த சிறுவனின் தாயாருக்கு கடந்த ஜனவரி மாதம்தான் எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது அவர் ஒரு என்ஜிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் மூலமாகவே இந்த சிறுவனுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications