அறிவியல் மாநாட்டில் மோடி 'சூடாக' பேசிக் கொண்டிருந்தபோது 'கூலாக' தூங்கி விழுந்த சித்தராமையா!
மைசூர்: மைசூரில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றும்போது கர்நாடக முதல்வர் சித்தாரமையா தூங்கி வழிந்துள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மைசூர் வந்தார். மைசூரில் நேற்று நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
வரும் 7ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் உரையாற்றும் முன்பு மோடி மாத்திரை சாப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில் அவ்வப்போது தண்ணீர் குடித்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மேடையில் அமர்ந்திருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசுகையில் தூங்கி வழிந்துள்ளார். நிகழ்ச்சி மேடையில் சித்தாரமையா தூங்கி சிக்கியது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் நேற்று மைசூரில் மோடியின் காருக்கு அருகே ஒருவர் பையுடன் ஓடி வந்து போலீசில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications