கர்நாடகாவில் அமைச்சரவையை மாற்ற சோனியா ஒப்புதல்.. ஆட்சியை தக்க வைக்க பிரயத்தனம்
டெல்லி: காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் தோற்ற நிலையில், ஆட்சியில் இருக்கும் ஒரே பெரிய மாநிலமான கர்நாடகாவில் வலுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இன்னும் சில தினங்களில் செய்து முடிக்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதி வழங்கியுள்ளார்.

மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வருடன், சோனியா மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் வைத்து சந்தித்து பேசிய சித்தராமையா, இம்மாற்றத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார். முன்னதாக லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடமும் சித்தராமையா பேசி, அமைச்சரவையில், யார் யாரை நீக்குவது, யாரையெல்லாம் சேர்ப்பது என முடிவு செய்தார்.
ஜாதி, மண்டல வாரியாக உரியவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுத்து கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. திறமையாக செயல்படாத 10 அமைச்சர்களுக்காவது கல்தா நிச்சயம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications