காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: மோடியிடம் சித்தராமைய்யா நேரில் வலியுறுத்தல்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சியினர் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மோடியிடம் சித்தராமைய்யா மனு அளித்தார்.
அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்றும், தற்போதைய மேற்பார்வைக் குழுவே தொடரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்
பிரதமரை சந்திக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் குநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்கக் கூடாது என்று வலியுறுத்தவே இன்று பிரதமரை சந்தித்துள்ளனர் கர்நாடகவைச் சேர்ந்த அனைத்துக்கட்சிக் குழுவினர். இந்த அனைத்து கட்சிக் குழுவில் வீரப்பமொய்லி, எடியூரப்பா, சதானந்தகெளடா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications