1984 கலவரம்: காங்கிரஸார் பெயரைக் கேட்டு ராகுல் வீட்டுக்கு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் பங்கு உள்ள காங்கிரஸாரின் பெயரை தெரிவிக்குமாறு கூறி சீக்கியர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் டைம்ஸ் நவ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் சில காங்கிரஸாருக்கு பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார்.

Sikhs protest outside Rahul Gandhi's residence

இதையடுத்து அந்த காங்கிரஸாரின் பெயரை தெரிவிக்குமாறு கோரி சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் யார், யாருக்கு பங்கு இருக்கிறது என்பதை கேட்டு இன்று சீக்கியர்கள் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு முன்பு கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலவரத்தில் பங்கு உள்ள காங்கிரஸாரின் பெயர்களை தெரிந்து கொள்ள சீக்கியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+