8 சிமி அமைப்பினர் சுட்டுக் கொலை... 6 வாரத்திற்குள் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சிறையில் இருந்து தப்பியோடிய 8 சிமி அமைப்பினர் மீதான என்கவுண்டர் குறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: அக்டோபர் 30ம் தேதி, சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேரை, சிறை பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியதாகக் கூறி மத்திய பிரதேச போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர். இதுகுறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் சிமி அமைப்பினர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. பின்னர், தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து 8 பேரும் கடந்த 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகளை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். இது ஒரு போலி என்கவுண்டர் என்று சமூக ஆர்வலர்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த 8 பேரையும் சுட்டுக் கொன்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 8 பேர் என்கவுண்டர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்டது.
இதனையடுத்து, 8 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications