8 சிமி அமைப்பினர் சுட்டுக் கொலை... 6 வாரத்திற்குள் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சிறையில் இருந்து தப்பியோடிய 8 சிமி அமைப்பினர் மீதான என்கவுண்டர் குறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: அக்டோபர் 30ம் தேதி, சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேரை, சிறை பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியதாகக் கூறி மத்திய பிரதேச போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர். இதுகுறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் சிமி அமைப்பினர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. பின்னர், தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து 8 பேரும் கடந்த 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகளை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். இது ஒரு போலி என்கவுண்டர் என்று சமூக ஆர்வலர்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த 8 பேரையும் சுட்டுக் கொன்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 8 பேர் என்கவுண்டர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்டது.
இதனையடுத்து, 8 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications