பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்!
சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி: சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் வரை மிக அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறியுள்ளது. சென்ற டிசம்பரில் மட்டும் 95.75 கோடிக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது.
மேலும் இதன்படி கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு டிசம்பரிலும் இந்த வருடம் செப்டம்பரிலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வர்த்தகம் சீராக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் இருக்கிறது.
மொபைல் வர்த்தகம் மூலமாக கடந்த மாதம் மட்டும் 8.6 கோடி வர்த்தகம் நடந்து இருக்கிறது. இந்த வருடத்திலேயே இதுதான் மிகவும் அதிகமான மொபைல் வர்த்தகம் ஆகும்.
இதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசின் விளம்பர பிரிவான 'டிஏவிபி' என்ற அமைப்பு புதிய திட்டங்கள் நிறைய வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவுப்பு வரும் ஜனவரியில் வெளியாகும்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications