பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்!
சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி: சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் வரை மிக அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறியுள்ளது. சென்ற டிசம்பரில் மட்டும் 95.75 கோடிக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது.
மேலும் இதன்படி கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு டிசம்பரிலும் இந்த வருடம் செப்டம்பரிலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வர்த்தகம் சீராக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் இருக்கிறது.
மொபைல் வர்த்தகம் மூலமாக கடந்த மாதம் மட்டும் 8.6 கோடி வர்த்தகம் நடந்து இருக்கிறது. இந்த வருடத்திலேயே இதுதான் மிகவும் அதிகமான மொபைல் வர்த்தகம் ஆகும்.
இதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசின் விளம்பர பிரிவான 'டிஏவிபி' என்ற அமைப்பு புதிய திட்டங்கள் நிறைய வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவுப்பு வரும் ஜனவரியில் வெளியாகும்.
-
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications