For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13 பேரை காவு வாங்கிய படையப்பா யானை.. மூணாறு சாலையில் உலா.. பீதியில் வாகன ஓட்டிகள்

Google Oneindia Tamil News

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து பயமுறுத்தியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

கேரள மாநிலம் மூணாறு மறையூர் சாலையில் சுற்றித்திரிகிறது படையப்பா என்ற பெயர் கொண்ட ஒற்றை காட்டு யானை, இதுவரை 13 பேரை அந்த யானை தாக்கி கொன்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

single elephant stop traffic in munnar-marayur road

கடந்த ஒரு வாரகாலமாக கன்னிமலை நயமக்காடு பகுதியில் உலா வரும் படையப்பா, அவ்வப்போது மலைப்பாதையில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து பீதிக்குள்ளாக்கி வருகிறது.

ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை?ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை?

செவ்வாய் அன்று மதியம் மூணாறு - மறையூர் சாலையில் திடீரென படையப்பா, சாலை நடுவே நின்றுகொண்டு வாகனங்களை இருபுறமும் செல்லவிடாமல் தடுத்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

single elephant stop traffic in munnar-marayur road

தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானை படையப்பாவை அந்த இடத்தை விட்டு விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகனங்களை செல்லவிடாமல் மிரட்டிய படையப்பா யானை, மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.அதன் பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

English summary
single elephant stop traffic in munnar marayur road. this elephant killed 13 peoples by attacks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X