திருமண நாளில்.. இணை பிரியா சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. ஒட்டுமொத்த ஊரும் ஆடிப்போச்சு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் சகோதரிகள் இருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு இரு சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் துணிச்சலாகவே இருக்கிறார்கள். எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் அவர்கள் மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

விபரீத முடிவு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இரட்டைத் திருமணம் நடைபெறவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, அந்த வீடே சோகத்தில் மூழ்கியது. திருமணத்திற்குச் சில மணி நேரங்களே இருந்தபோது, இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்கள் தீப் சிங் என்பவரின் மகள்களான ஷோபா (25) மற்றும் விமலா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு தனியார்ப் பள்ளி ஆசிரியர்களாக வேலை செய்து வந்தனர். இருவருக்கும் நேற்று சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு வரை திருமணக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது.
உயிரிழப்பு
அப்போது தான் அவர்கள் மயங்கிக் கிடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் இரு சகோதரிகளையும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை வாங்கி சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
போலீசார் விசாரணை
இது தற்கொலை என்பதால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது தொடர்பாக விசாரணையை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சகோதரிகள் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என என்றனர். அதேநேரம் உயிரிழப்பிற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது என்று என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகம்
தகன ஏற்பாடுகள் நடக்கும்போதே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சகோதரிகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.. அதேநேரம் இந்தச் சம்பவத்தில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகத் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தந்தை வழிக் குடும்பத்தினரைச் சாடுகிறார்கள்.
சகோதரிகள் இருவருக்கும் முன்பு சில வரன்கள் பார்த்தும், செட் ஆகவில்லையாம். இதனால் சீக்கிரம் கல்யாணம் செய்யும்படி தீப் சிங்கின் இளைய சகோதரிகள் அழுத்தம் கொடுத்தாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications