நேபாள இளம் பெண் டெல்லியில் பலாத்காரம்
டெல்லி: நேபாள நாட்டை சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தலைநகர் காட்மண்டுவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லி வந்துள்ளார். டெல்லி மெஹ்ருளி பகுதியை சேர்ந்த இளைஞர் வேலை வாங்கி தருவதாக கூறி தனது வீட்டுக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, வேலை வாங்கி தருவதாக கூறிய நபரும் மேலும் 5 நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து நேபாள பெண் போலீசில் புகார் செய்து உள்ளார். புகாரில் தன்னை பலாத்காரம் செய்த 6 பேரும் மது அருந்தி இருந்ததாகவும். தன்னையும் மது அருந்துமாறு வற்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் நேபாள பெண்ணுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேபாள பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications