அடுத்தடுத்து தமிழர்கள் கைது.. செம்மரக்கட்டைகள் பறிமுதல்... மீண்டும் பதற்றத்தில் தமிழக எல்லை
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி மலைப் பகுதியில், தமிழர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களால் மீண்டும் தமிழக எல்லை கிராமங்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆலிபாஷா, ராம்மோகன்ரெட்டி, வனத்துறை நிலைய அலுவலர் குருவய்யா தலைமையில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் உத்திரப்பிரதேச பதிவு எண் கொண்ட கார் வந்தது. அதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா மல்லபட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள், நீலிவாசம் கிராமத்தை சேர்ந்த துக்காராம், நல்லிப்பட்டு அய்யனார், தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா வீரப்பநாயக்கபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாதேஷ், திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பெருனாமத்தூரைச் சேர்ந்த சகாதேவ் ஆகிய 6 பேர் இருந்துள்ளனர்.
Recommended Video

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இதே போல் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் ரோந்து சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. வாசு தலைமையிலான போலீசார், திருமலைக்கு பாத யாத்திரை செல்லக் கூடிய மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 30 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரம் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வனப்பகுதியில் தப்பி சென்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மீண்டும் செம்மரக்கட்டைகள் கடத்தல் மற்றும் கைது விவகாரம் அதிகரித்துள்ளதால், ஆந்திர எல்லையோர தமிழக கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications