அடுத்தடுத்து தமிழர்கள் கைது.. செம்மரக்கட்டைகள் பறிமுதல்... மீண்டும் பதற்றத்தில் தமிழக எல்லை
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி மலைப் பகுதியில், தமிழர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களால் மீண்டும் தமிழக எல்லை கிராமங்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆலிபாஷா, ராம்மோகன்ரெட்டி, வனத்துறை நிலைய அலுவலர் குருவய்யா தலைமையில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் உத்திரப்பிரதேச பதிவு எண் கொண்ட கார் வந்தது. அதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா மல்லபட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள், நீலிவாசம் கிராமத்தை சேர்ந்த துக்காராம், நல்லிப்பட்டு அய்யனார், தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா வீரப்பநாயக்கபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாதேஷ், திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பெருனாமத்தூரைச் சேர்ந்த சகாதேவ் ஆகிய 6 பேர் இருந்துள்ளனர்.
Recommended Video

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இதே போல் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் ரோந்து சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. வாசு தலைமையிலான போலீசார், திருமலைக்கு பாத யாத்திரை செல்லக் கூடிய மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 30 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரம் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வனப்பகுதியில் தப்பி சென்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மீண்டும் செம்மரக்கட்டைகள் கடத்தல் மற்றும் கைது விவகாரம் அதிகரித்துள்ளதால், ஆந்திர எல்லையோர தமிழக கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications