பெங்களூரு பள்ளி சிறுமி பலாத்காரம்: ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமியை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கர்நாடகாவில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். முஸ்தபாவின் அறையில், பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற ஒரு மடிக்கணினியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
முஸ்தாபாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோர உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பள்ளியில் பணிபுரியும் 3 பேரை ஏற்கெனவே கைது செய்து காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக பெங்களூரு காவல் ஆணையர் ராகவேந்திர அவுராட்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications