கூட்டு கடற்படை பயிற்சிக்காக கோவாவில் இலங்கை போர்க்கப்பல்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: இந்திய கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சாகரா கோவா வந்துள்ளது.

கோவா கடற்பரப்பில் கடந்த 4-ந் தேதி இந்திய -இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இப்பயிற்சி நாளை மறுநாள் வரை தொடர்கிறது.

இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் டெக், இரண்டு விரைவுத் தாக்குதல் கப்பல்கள், செடாக் ஹெலிகாப்டர் ஆகியவை இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை ரோந்து கப்பலான சாகராவும் கோவாவில் முகாமிட்டிருக்கிறது.

SLINEX 2013 என பெயரிடப்பட்ட இந்த கூட்டுப்பயிற்சியில் கடலில் தடுப்பு நடவடிக்கைகள், கப்பலில் ஏறி தேடி கைப்பற்றல், கடலில் தேடிக்காப்பாற்றுதல், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+