மும்பையில் காருக்குள் சிக்கிய 4 வயது குழந்தை மூச்சு திணறி சாவு
மும்பை: மும்பையில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு வாகனங்களை நிறுத்த இடமின்றி ஆங்காங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் அவற்றை நிறுத்துகிறார்கள்.
இதேபோல, காட்கோபர் பகுதியில் போலீசார் பாதி முடிவைடைந்த தருவாயில் ஒரு கட்டிடத்தின் கீழ் கார் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது, அப்பகுதி குடியிருப்பை சேர்ந்த 4 வயது சிறுவன் குர்பான் காரில் ஏறி விளையாடியுள்ளது. ஆனால் அந்த கார் திடீரென உள்ளிருந்து பூட்டப்பட்டு விட்டது.
காரின் உள்ளே மூச்சு திணறிய குழந்தை குர்பான் இறந்து விட்டான். குர்பான் கடந்த சில நாட்களாக நிமோனோயா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். எனவே காரில் சிக்கிய சமயம் அவன் மிகவும் பலவீனமாக இருந்தான். எனவே மூச்சு திணறி குர்பான் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications