பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்தது... உயிருக்கு போராட்டம்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் பிரபலமான வாவா சுரேஷை பாம்பு கடித்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான இவர் இதுவரை ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளையும், 30க்கும் மேற்பட்ட ராஜ நாகங்களையும் பிடித்துள்ளார். வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் பாம்புகள் வந்தால் தனது பைக்கில் அங்கு சென்று பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டு விடுவார். இதற்காக இவர் யாரிடமும் பணம் வாங்குவது இல்லை.

வனத்துறையில் இவருக்கு வேலை கொடுக்கவும் கேரள அரசு முன் வந்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதுவரை 250க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் அவரை கடித்துள்ளன. 9 முறை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் பூஜப்புராவில் வீடொன்றில் புகுந்த நல்லபாம்பைப் பிடிக்கச் சென்றார் வாவா சுரேஷ். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரது கையில் கடித்தது. இருப்பினும் அவர் பாம்பை விடாமல் பிடித்து சாக்கு பையில் போட்டார்.
பாம்பு கடித்ததால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications