இந்திய தூதரை அவமதிப்பதா? பாக். தூதர் பாசித்துக்கு சம்மன்!
டெல்லி: பாகிஸ்தானில் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பம்பவாலேவுக்கு கராச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்தார். ஆனால் நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரம் இருக்கும் நிலையில் அது ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதற்கான எந்த ஒரு காரணமும் தெரிவிக்கப்படவும் இல்லை. இது திட்டமிட்ட அவமரியாதை செய்யும் செயல் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.
இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று பம்பவாலே பேசியிருந்ததால்தான் இப்படி அவமதிக்கப்பட்டார்.
தற்போது இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சம்மன் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே அப்துல் பாசித், பாகிஸ்தானின் சுதந்திர தின நாள் நிகழ்ச்சியில் காஷ்மீர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சர்ச்சையில் சிக்கினார். முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications