'சிவனுக்கு நான் பிள்ளை பெற்றேன்'... புதிய பரபரப்பில் முன்னாள் மாடல் அழகி சோபியா ஹயத்
மும்பை: முன்னாள் மாடல் அழகியும், கன்னியாஸ்திரியுமான சோபியா ஹயத் சிவன் மூலமாக தான் குழந்தை பெற்றதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கவர்ச்சி மாடல் அழகியாக வலம் வந்தவர் சோபியா ஹயாத். பலருடன் இணைத்தும் பேசப்பட்டவர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுடனும் கூட இவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிலையில் திடீரென கவர்ச்சியைக் கைவிட்டு விட்டு கன்னியாஸ்திரியாக மாறி பரபரப்பை ஏற்படுத்தினார் சோபியா. தற்போது புதிய பரபரப்பில் இவர் சிக்கியுள்ளார்.

காசிப் பயணம்...
சமீபத்தில் காசிக்குப் போயிருந்தார் சோபியா. மேலும் அவுரங்காபாத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கும் போயிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதில் அவர் தியானம் செய்வது போன்ற வீடியோவும் இடம் பெற்றுள்ளது.

தெய்வீக அனுபவம்...
இதுகுறித்து சோபியா கூறுகையில், "இந்த இடங்களூக்குப் போனபோது என்னையும் அறியாமல் ஒரு தெய்வீக அனுபவத்தை உணர்ந்தேன். மேலும் அவுரங்காபாத்தில் உள்ள சிவன் கோவிலுக்குப் போனது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. எனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன்.
| |
பிள்ளைகள்...
நான் சிவனுக்கு பிள்ளை பெற்றதை உணர்ந்தேன். தற்போது சிவன் எனக்குள் வந்துள்ளார். அவர் எனக்குள்தான் இருக்கிறார். எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளேன்.

மிகப்பெரிய மாற்றம்...
நான் யாரோ அதுவாக மாறிக் கொண்டிருக்கிறேன். கடவுள்கள் எல்லாம் என்னைத் தேடி வருகிறார்கள். எனக்குள் வந்துள்ள மாற்றம் மிகப் பெரியது.
ஆன்மா...
சிவன் எனக்குள் இருக்கிறார். எனக்குள் சிவலிங்கம் இருக்கிறது. அது எனது ஆன்மாவை சக்தி வாய்ந்ததாக உலுக்கி வருகிறது" என்று கூறியுள்ளார் சோபியா.












Click it and Unblock the Notifications