ஹைதராபாத்தில் மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக இருப்பவர் சர்வானந்த்(37). அவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த பத்மப்ரியா என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தான் பத்மப்ரியாவுக்கு ஏற்கனவே 2007ம் ஆண்டில் திருமணம் நடந்து விவகாரத்து பெற்ற விஷயம் சர்வானந்துக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சர்வானந்தும், பத்மப்ரியாவும் ஒருவர் மீது மற்றொருவர் பெங்களூர் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பத்மப்ரியா தனது தாய் பரமேஸ்வரியுடன் சேர்ந்து சர்வானந்த் வசித்து வரும் செகந்திராபாத் வீட்டில் இருந்து வந்தார்.
தாயும், மகளும் சேர்ந்து சர்வானந்தை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் சர்வானந்த் தனது உறவினர் உதவியுடன் நேற்று இரவு மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications