கலி முத்தி போச்சு: கேரளாவில் பெற்ற தாய் என்றும் பாராமல் பலாத்காரம் செய்த காமக்கொடூர மகன்
கோட்டயம்: கேரளாவில் பெற்ற தாயை மகனே பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலாவை சேர்ந்த 25 வாலிபர் தினமும் குடித்துவிட்டு வந்து பெற்ற தாயையே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில் தினமும் பிரச்சனை நடப்பதை அக்கம்பக்கத்தினர் சிறிது காலம் பார்த்தும் பேசாமல் இருந்தனர்.
பிறகு அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெற்ற தாயையே பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்.
குடும்பத் தலைவர் கூலி வேலை செய்பவர், மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தாய் என்றும் பாராமல் மகனே இந்த கொடுமையை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications