காங். தலைவராக சோனியா தொடருவார்: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என அக்கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் உட்பட 7 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநில தேர்தல்களையும் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
மேலும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடருவார்; உட்கட்சி தேர்தல்கள் ஓராண்டுக்குப் பின்னர் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications