நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi also responsible for coal scam, says LK Advani
டெல்லி: நாட்டை உலுக்கிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பங்கிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

'மத்திய அரசை தற்போது இரண்டு பேர் நடத்தி வருகின்றனர். சோனியா காந்தியின் ஒப்புதலை பெறாமல் பிரதமர் மன்மோகன் சிங் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால், நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமருடன் சேர்ந்து சோனியா காந்திக்கும் பங்குள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசில் நேர்மையற்ற தன்மை நிலவி வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தபோது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, ஊழலுக்கான பழிகளை கூட்டணி கட்சிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தது.

இப்போது நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமரே நேரடியாக மாட்டிக்கொண்டுள்ளார். இந்த ஊழலில் கூட்டணி கட்சிகளின் மீது யாரும் பழி போடவே முடியாது.

இந்த ஊழலில் சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது எல்லாம் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+