வாய் கிழிய பேசுகிறது பாஜக.. அஸ்ஸாம் கூட்டத்தில் சோனியா தாக்கு
லக்கீம்பூர், அஸ்ஸாம்: எதிர்க்கட்சியான பாஜக மிகப் பெரிதாக பேசி வருகிறது, வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் துவேஷ அரசியலையே அது செய்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் லக்கீம்பூரில் இன்று சோனியா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் கங்கா -யமுனா கலாச்சாரத்தை பலப்படுத்திய கட்சியாகும். ஆனால் பாஜக அதை பலவீனமாக்கி விட்டது.

எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக, நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வாய் கிழியப் பேசி வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எதையாவது செய்தார்களா.. அவர்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
நாங்கள் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றில் கிட்டத்தட்ட அனைத்தையுமே நிறைவேற்றி விட்டோம். அதேபோலத்தான் 2014 தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம், மக்கள் ஆதரவுடன்.
நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதில்லை. நாங்கள் சொல்ல மாட்டோம். செய்வோம்.
அஸ்ஸாமிலும், பிற பகுதியிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவரக்ள். சுதந்திரத்திற்கு முன்பும், பின்னரும் தங்களது வாழ்க்கையை இந்த நாட்டுக்கு ஒப்புக் கொடுத்தர்கள்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பாஜகவினர் எங்கே இருந்தனர். சுதந்திற்கு முன்பும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, பின்னரும் சரி அவர்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது. நாட்டைப் பிரித்தவர்கள்தான அவர்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications