பவாருடன் சேர்ந்து பேசும் கூட்டம்.. ரத்து செய்தார் சோனியா
மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் இணைந்து கலந்து கொள்வதாக இருந்த பிரசாரக் கூட்டத்தை உடல் நிலையைக் காரணம் காட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார்.
தற்போது அவருக்குப் பதில் ராகுல் காந்தி கலந்து கொள்வார என்று அறிவிக்கப்பட்டுளளது.
மகாராஷ்டிர மாநிலம் துலே, நந்தர்பார் மற்றும மும்பை ஆகிய இடங்களில் சோனியா காந்தி பிரசாரக் கூட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தார் சோனியா காந்தி.
இதில் துலே கூட்டத்தில் சரத் பவாரும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தனது கூட்டங்களை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாவுக்குப் பதில் அவரது மகன் ராகுல் காந்தி துலே கூட்டத்தில் பவாருடன் பங்கேற்பார். மேலும், குலாம் நபி ஆசாத் நந்தர்பார் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாவின் உடம்புக்கு என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவில்லை.