பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த பிரிவு உபச்சார விருந்து: ராகுல் ஆப்சென்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு பிரிவு உபச்சார விருந்து அளித்தார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித், ஜோதிர்ஆதித்யா சிந்தியா, அஜய் மகேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது மன்மோகன் சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இத்தனை முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட விருந்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

Sonia Gandhi hosts farewell party for PM Manmohan Singh, Rahul skips dinner

இது குறித்து ராகுல் காந்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மன்மோகன் சிங்கிற்கு சோனியா பிரிவு உபச்சார விருந்து அளிக்கையில் ராகுல் வெளியூருக்கு செல்வதாக பிரதமரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ராகுல் கடந்த சனிக்கிழமை மன்மோகனை சந்தித்து பிரிவு உபச்சார விருந்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை தெரிவித்துவிட்டார் என்று அஜய் மகேன் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+